Friday, December 26, 2014


தொடர்பியல்  ஊடகமான முகநூலில் யன்பாட்டு தமிழ்


1.அறிமுகம் 

ஆரம்ப கால மக்கள்  , ஆடல் பாடல் , அசைவு என்று   தங்கள்  வெளிப்பாட்டு  ஊடகமாக  ஓவியம் , சித்திரம்பாட்டு , நடனம் ., நாடகம் ..  போன்றவற்றை தொடர்பாடல் ஊடகங்களாகக் கண்டு பிடித்ததில்  ஆரம்பித்து இன்று வரை அவனின் ஒவ்வொரு அசைவுகளும்   இலத்திரனியல் ொழில்நுட்பம்  வரை தொடர்பாடலில் புரட்சி கண்டுள்ளது . 
 விஞ்ஞரனம் , தொழில் நுட்பப் புரட்சிகளால் தனித் தமிழ் , மற்றும் தமிழ் சமுகம் சிதைவடைந்து வருகின்றது என்ற கருத்தியல்  அனைத்து  மக்களிடமும்அனைத்து  மக்களிடமும்  அண்மைக் காலங்களில் யிர்ப்பெற்று  வருகின்றது
 இவ்வாறான அவலக் குரல்எழுப்புபவர்களாலே இத்தகைய சிதைவுகளை  ீர் செய்ய முடியாத மன அழுத்தங்கள் , நெருக்கடிகள் ஏற்படுவதும்குறையவில்லைஆயினும்  ஒவ்வொரு தொழில் நுட்பங்களும் பயன்படுதுபவனின் மனநிலை சார்ந்தே நன்மை , தீமைகளை  தீர்மானிக்க முடியும் .  அந்தவகையில் சமுதாய வலைத் ொடர்பு  ஊடகமான முகநூலில் தமிழ் மொழிப் பயன்பாடு  என்பதை  அடிப்படையாகக்  கொண்டு  இந்த ஆய்வுகட்டுரை  அமைகின்றது .


2. முகநூல் என்றால் என்ன

முகம் +நூல் என்பதை புலப் படுத்துகிறதுஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கருத்து நிலை  இன்று அகத்தின் அழகு முக நூலில் தெரியும் என்கின்றவகையில் பரிமாணம் கொண்டுள்ளது .  முக நூல் , முகப் புத்தகம்என்றும் பொருள் கொள்ள முடியும்வ்வொரு மனித சமுதாயத்தினதும் , முகவரிகளை அவர்களுக்கும் தெரியாமலே உள்ளார்ந்து வைத்துள்ளது

இணையத்  தொழில் நுட்பத்தின்  புரட்சிகர வளர்ச்சியில் முக நூலின் பங்கு உன்னதமானது .  ஏனைய இணையத் தளங்களில் , இணையதழ்கள் ஆகியவற்றில்  பதிவுகள் , கருத்தை பதிவு செய்ய வெளிப்படுத்த  எத்தனையோ ஆயிரங்களும்  செலவாகும் .இன்று மிக இலகுவாக முகநூல்ஊடாக  பதிவு செய்ய முடிகின்றது .  வசதி வாய்ப்புள்ளவர்கள் முன்பு நூல்களை  வெளியீடு செய்தனர் .   இப்போ எல்லோர் கைகளிலும் ஒட்டிப் பிறந்தகுழந்தையாக கைபேசி ருப்பதனால் , கிராமங்களை கூட இணையங்கள் ஆக்கிரமித்து விட்டது . ஆயினும் அதில் முகநூல்  ஒருவரின் மனநிலையை மிக மிக ஒரு நோயார்ந்த போதை நிலைக்கும் கொண்டு செல்கின்றது .

blogs , மற்றும் ஏனைய  இணைய ஊடகங்கள்   ஒழுங்கு முறையில்  உள்ளது.ஆனால் முக நூல்  பல்வேறு  விடயங்களையும்  எந்த    தயக்கமுமின்றி ஆவணப்படுத்தும் ஒரு நூலகமாக உள்ளது . அச்சு ஊடகங்கள் , தொலைக்காட்சி ஊடகங்களில்  ஒரு பதிவை மேற்கொள்ளும் நாம் அவற்றை மீள் உருவாக்கம்செய்வது அவளவு இலகு அல்லஆனால் சமுதாய வலைத் தளங்களை பயன்படுத்தும் போது  எமது விருப்புக்களை , சிந்தனைகளை உடனுக்குடன் மாற்றம்செய்து கொள்ளவும் மொழிப் பயன்பாடு இலகுவாக்கப் பட்டுள்ளது .இங்கு தனி  மனித  அந்தரங்கங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள்எச்சரிக்கை செய்கின்றனர் .  இது பற்றி  சென்னைப் பல்கலைக் கழக  தொடர்பியல் துறை  தலைவர்  பேரா . ரவீந்திரன் அவர்கள் குறிப்பிடும்  போது  '' முகநூல்போன்றவற்றில் அங்கத்தவர் ஆவதற்கு   பொது அந்தரங்கம் சார்ந்த பல விடயங்களை பதிவு செய்கிறோம்இந்த பதிவு செய்யப் பட்ட பதிவுகள் வ்வாறு பதிவுசெய்யப் படுகின்றன என்பது கேள்வியே . பன்னாட்டு நிறுவனங்கள் நம் அந்தரங்க விடயங்களை ஓர் வியாபாரத் தளத்துக்கு ொண்டு வரும் போது மற்றவர்கள் பார்வைக்கு வெளி வர வாய்ப்பு உண்டு . அப்பொழுது  பாதுக்காக எந்த முகாந்தரமும் இல்லை . '' என்கின்றார்ஏனெனில் அவர்களை தமிழ்மொழித் தொடர்பு  மிக ளிய முறையில்  பயன்பாட்டை  அடையாள படுத்தி உள்ளது என்றே கொள்ள முடிகின்றது . 


3. ,முக நூலின் தோற்றமும் .வளர்ச்சியும் 
பேஸ் புக்  2004 இல் தொடங்கிய ணைய வழி  சமூக வலையமைப்பு  நிறுவனம் ஆகும்ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில்  ஒரு மாணவர்  மார்க் சக்கர பார்க்ஹாவார்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்ததில் தொடங்கி செயல் முனைப்பு பெற்றுள்ளது .
2008 இல் முகநூளின் தமையகம்  அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில்  தொடங்கப் பட்டது . பின்பு 2011 இல் முகநூலின் தலைமையகம் ென்லோ பார்க் ,கலிபோர்னியாவுக்கு மாற்றப் பட்டது

சமூக வலைத் தளங்கள் ஊடாக  செய்தியளிப்பு  தீவிரமடைந்து உள்ளது . இன்று தொழில் நுட்பங்கள் பயனர்களையே செய்தியாளர்களாக்கி  உள்ளதுஇவர்கள்தமக்கான தளங்களை ாமே உருவாக்கிக் கொள்கின்றனர் . 
புரட்சிகர தொழில் நுட்பங்கள் நம சமூகத்தின் மத்தியில் பெரும் ஐயங்களை ஏற்படுத்தி  உள்ளது . லாசார சீர் குழைவு , தமிழ் மொழி சிதைவு  என்றெல்லாம்பலரும் பல கருத்தாடல்களை புரிவதும் நம் கண முன் நிகழ்ந்த வண்ணம் உள்ளது ஆயினும் தமிழ் மொழி சிதைக்கப் படும் என்றோ , தமிழ் அச்சு ஊடகம்ஒழிந்து  விடும் என்றோ நாம் ுரிதலற்று பேச முடியாது .  தொழில் நுட்பங்கள் தமிழ் மொழிக்கான ..... மென் பொருட்களை
 உருவாக்குவதன் ஊடாக அவை இன்னும் இன்னும் பரிமாற்றம் அடையும் வாய்ப்புக்களே அதிகம் . பல படைப்பாளிகளை , ஆளுமைகளை , தமிழ் டாகஉருவாக்கியும் உள்ளதுபுகைப்பட கலைஞன் , கட்பனையாளன்இயக்குனர்இசையாளன்எழுத்தாளன்,  என்று பல துறைகள் வளரவும் இங்கு தமிழ் உபயோகம் அதிகம் . . நாளைய பத்திரிக்கை  செய்திகளை கூட இன்றைய நிமிடச் செய்திகளாக பதிவு செய்வதில் பெரும் போட்டி நிலை கூட உள்ளதுஇந்தமொழிப் ிரயோகம் ஆங்கிலத்தில் இருக்குமாயின்  . இத்தகைய ஒரு புரட்சியை முகநூலினால்  செய்திருக்க முடியாது 

4. தமிழ் மொழி 
தமிழ் மொழி தமிழர்களினதும் , தமிழ் பேசும் பலரதும் தாய் மொழி கும் . இலங்கை யின்    வடக்கு கிழக்கு மாகாணம்கொழும்புதிருகோணமலை,  மலையகம்  போன்ற இடங்களிலும் , இந்தியா , 
மலேசியா சிங்கப்பூர்  ஆகிய நாடுகளில்  அதிகளவிலும் ,  ஐக்கிய அரபு  அமீரகம் , தென்னாபிரிக்கா , 
மொரிசீயஸ்  போன்ற நாடுகளில்  சிறிய  அளவிலும்  தமிழ் பேசப்பட்டு வருகின்றன [  விக்கி பிடியா ]
தமிழ் மொழி இனம்  சார்ந்தது . ஒரு இனத்தின் அடையாளம் ஆகும். தமிழ் நாட்டில் , தமிழீழத்தில்    தமிழோடு வாழ்ந்து , தமிழில் பேசி தமிழ்ப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள்  தமிழர்கள் . தமிழை வேராகக் கொண்ட இரு நாடுகளிலும் தமிழ் சிதைவுறும் அவலத்தை இரு இரு நாட்டு அரசுகளும்  திட்டமிட்டு செய்கின்றன. [ vikki peediyaa] அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியுமா? 



5, முகநூலில்  தமிழ் பயன்பாடு

தமிழ் மொழி இந்தியாவில் தமிழ் ாட்டிலும் , இலங்கை , சிங்கபூர் , மலேசியா  போன்ற நாடுகளில்  திகார மொழியாகவும் உள்ளது . இது தவிர பல உலகநாடுகளில் தமிழ் மொழி பேசுவோர்  வாழ்ந்து வருகின்றனர் 

கடந்த பத்து வருட காலத்தினுள் ுகநூலின் பாவனை காட்டுத் தீயானது . தகவல் தொழில் நுட்ப உலகில் ,  இன்றி அமையாத  சாதனமாகக் கூட  இந்தமுகநூல் பாவனை அமைந்திருப்பது  மிகை  அல்ல . பாடசாலை மாணவர் தொடக்கம் பெரிய பெரிய இலக்கிய கர்த்தா வரை முக நூலை பயன்டுத்துகின்றனர் . அவர்கள் பயன்படுத்துவது மட்டுமன்றி எழுத்தாளனாக , படைப்பாளனாக , அறிவியலாலனாக , விமர்சகனாக என்று பல்வேறுபாத்திரங்களையும்  பெற்றுக் ொள்ளக் கூடிய ஆளுமைகளை பெற்றுக் கொள்ளவும் இங்கு தமிழ் மொழி  யன்பாடு  மிக முக்கிய காரணியாக  அமைந்துள்ளது

நவீன  யுகத்தில் தமிழ் சமூகத்துக்கு கிடைத்த  மிகப் பெரும்   ேகமாக தகவல் பரிமாற்ற தொடர்பாடல்   ஊடகமாக முகநூல் புரட்சிகர மாற்றங்களைக்கண்டுள்ளது . பல்வேறு பட்ட இணையங்கள் போன்றவற்றுடன்  இணைந்து  அவர்கள் கருத்துக்கள்எண்ணங்கள்,  ஆதங்கங்கள்  , சந்தோசங்கள்துக்கம்,விவாதம்புரட்சி , குமுறல்கள் , கற்பனைகள் , கனவுகள்மட்டுமன்றிசெய்திகள்ஆய்வுகள்கருத்துக்கள்புகைப்படம்வீடியோ , விளம்பரம்மருத்துவம் ,கல்வி , ிருமணம் ,  போட்டிகள்கவிதைகட்டுரைகுறும்படம்இசைநடனம்நாடகம்புகைப்படம்,.தொழில் .....என்று யாவற்றையும் மனம் திறந்துவெளிப்படுத்தும்  ஊடகமாக முக நூல் உள்ளது

முகநூல் நட்புக்களை இணைத்துக் ொள்ளுதல்  என்பதனை அடிப்படையாகக் கொண்டு  இன்று இதன் பரிமாணம் விரிவாக்கம் பெற்றுள்ளது . இது இளம் சமூகத்தினிடையே  பெரும் சவாலாக் உள்ளது .தொழில் நுட் வளர்ச்சி இன்று யாரையும் யாரும் தொடும் அளவிற்கு சுருக்கி வைத்துள்ளது .ஒருவருன்பதிவுகளான   எண்ணங்கள்கதைகள்படங்கள்,  கல்விதொழில்  என்பன அவர் பற்றிய  எண்ணப் பாடுகளை , நோக்கம் குறிக்கோள்  , நட்புக் குழுக்கள் ,நட்பின்  தரம் , அரசியல்  போன்ற பின் புலன்களை கண்டறியவும் உதவுகின்றது.

பண்பாடு,கலாச்சாரம்கொண்தமிழ் மொழியினைத் தாயகமாகக் கொண்டு தமிழகமும் ஈழமும் விளங்குகின்றது .   ஈழத்தில் இனரீதியான  மொழிரீதியான  யுத்தத்தினால் தமிழ் மக்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து  அனாதரவாகி  ஏதிலிகளாக  உலகின்  நாளா  புறமும் வாழத் தொடங்கினார்கள் . ஈழப் போருக்கான  முக்கிய   காரணமே இந்த இன மொழிப் போர் தான்  இந்த இனப் போர் இல்லை என்றால் தமிழன் என்று ஒரு இனம் இருந்தது  என்றஅடையாளமே  இல்லாமல் போயிருக்கும்தமிழன்  என்பதற்காகவே  அடக்கப் பட்டான் , டுக்கப் பட்டான் , கொல்லப் பட்டான்கொலை செய்யப்பட்டான் ,கடத்தப் பட்டான் , கைது செய்யப் பட்டான் , காணாமல் போனான், , கரு கலைக்கப்பட்டாள் , வன்முறைக் குள்ளானாள் , இடம்பெயர்ந்தான்புலம் பெயர்ந்தான் ,   ஏமாற்றப்பட்டான் , அகதியானான் ...என்பது மட்டுமன்றி  ,சொத்துக்களும்  ,  சொந்தங்களும் , பந்தங்களும்  றிக்கப் பட்டன , வீடு அற்றவர்களாகவும், நாடு அற்றவர்களாகவும் நடுத் தெருவில் விடப்பட்டனர் . இன் நிலைமையிலும் ஈழத்தமிழன் தாய் மொழிக்காகவும்,  தமிழ் இனத்துக்காகவும் வாழ்  முழுக்க போராட வேண்டியவனாகவே உள்ளான் . இந்த உணர்வின் வலிகளே  இன்னும் இன்னும்  பாடுபொருள்களாக  முகநூலை அலங்கரிக்கின்றன . அமெரிக்கா ,   கனடா  ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா  , மற்றும்  ஈழம்  ுகநூல் பாவனையில் முன்னணி  வகிக்கக் காரணம் தமிழ்மொழிப் பயன்பாடே ஆகும். .

மிக அண்மைக் காலங்களில் பெரும் பாலும் 1995 களின் பின்பு  இலங்கையின்  இனவழிப்பு காரணமாக அகதிகளாக இடம் பெயர்ந்தும் ,  , தொழில்களின் நிமித்தம்,  கல்வி   மற்றும் திருமண பந்தங்கள்  ஊடாக  பல ஈழத் தமிழர்கள் ந்தியாகனடாஇலண்டன் , பிரான்ஸ் , அவுஸ்திரேலியாசிங்கப்பூர் , மலேசியா  , சுவீஸ்நோர்வே . என பல்வேறு நாடுகளில்   வாழ்ந்து வருகின்றனர் . இந்திய மக்கள் தொழில் , கல்வியின் நிமித்தம் வெளி நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் . த் தகைய நாடுகளில் பழைய தலைமுறைகள்  மற்றும் ஓரளவு இரண்டாம் தலைமுறைகள் தமிழ் மொழியை உயிர்ப்புடன் பேணி வந்தாலும் , புதிய லைமுறைகளுக்கு / , இளம் தலை முறைகளுக்கு தமிழ் சப்பாகவும் இருக்க தான் செய்கின்றது . அவர்கள் முதியவர்களின் வார்த்தைகளை மதிப்பதுமில்லை , ுதியவர்களின்  பண்பாட்டை கடைப்பிடிப்பதுமில்லை ,  தமிழ் பண்பாடு பற்றி அறியவோ , தொடரவோ  விருப்பற்றும் ,  ஆர்வமற்றும் உள்ளனர் .  ஆயினும் ஆங்காங்கே சிலர் தம் ொழி மீதான ஆழமான காதல்  காரணமாக பிள்ளைகளை  தமிழ் கலை நிகழ்வுகள் , இசை , நடனம்  , தமிழ் பண்டிகைகள் , விழாக்கள் , போட்டிகள் , இலக்கியப் படைப்புக்கள்இலக்கிய சந்திப்புக்கள்,  மொழி மற்றும் பண்பாடு சார் நிகழ்வுகள்  என்றும்  பல்வேறு கலை பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில்  பங்கு பெற்றவும் வைக்கின்றனர் .  என்பதும் ஒட்டுமொத்தமாக மறுக்க முடியாத சம்பவங்கள் ஆகும் .  இன்றைய  நவீன ஊடகங்களில் youtup ,வலைத்தளங்கள்  மற்றும்  முகநூல்கள் போன்றன  இத்தகைய  இணைய  ழி  ஊடான மொழி  வளர்ச்சியில் , மொழிப் பிரசாரத்தில் பெரிதும் ங்கெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது . தமது கெட்டித் தனங்கள் ஆளுமைகளை  அவற்றின் னூடாக  பதிவேற்றம் செய்து  ஏனையவர்களும் பயன் பெரும் வகையில் அவை புரட்சியையும் புரிகின்றன என்றால்  மிகையல்ல.
. .முகநூல் பயன்படுதுவதாயின் கட்டாயம் ஆங்கிலம் தான் தெரிய வேண்டும் என்று இல்லைதமிழ்தமிங்கிலம், [ தமிழை    ஆங்கில உச்சரிப்பில்  டைப் செய்வது. ] என்றும் அவை பதிவாகின்றனமேலை நாடுகளில் ஆங்கிலமும் , அவர்கள் தம் தாய் மொழியும் இருந்தாலும் அணைத்து நாடுகளிலும் தமிழர்கள்பரவி வாழ்வதனால் அவர்கள் தமிழை வளர்க்க அரும் பாடு பட்டு வரும்,  கடந்த காலங்களை விட அண்மைக் காலமாக பத்து வருடங்களுக்கும் மேலாக அதிவேகமான  வளர்ச்சியில் தமிழ் மொழிப் பயன்பாடு  இணைய தளங்கள்முகநூல் ஆகியவற்றின் பங்கு அளப்பரியது .தமிழ் எழுத்து என்பதற்கு இனியும்தமிழர்கள் மட்டும் சொந்தக் காரர்கள் ல்லை , தமிழக அரசு , ,  பன்னாட்டு கணினித் தர அமைப்புக்கள் [ ஒருங்குறி சேர்த்தியம் போன்றவை ]  கணினி /கைப்பேசி தயாரிப்பாளர்கள் . உருவாக்குபவர்கள் ,  எழுதுபவர்கள் என்று  மொழிகள் னைத்துக்கும் சொந்தம் கொண்டாடத்  தொடங்கி விட்டனர் . எனஇணைய பயன்பாட்டின் தமிழ் தொடர்பாக  தன்னுடைய  வலைப் பதிவில் பத்திரிகையாளர்  பத்திரிசெஸ்திரி குறிப்பிட்டுளார் . இதே போன்று சிங்கப்பூரில் கவிமாலைஇலக்கிய வட்டம்இலக்கியக் களம்மக்கள் கவிஞர் மன்றம் , மாதவி கலை இலக்கிய மன்றம் போன்றன  தமிழ் ொழியை வளர்ப்பதில்  மிக நீண்ட ுயற்சிகளை செய்து வருகின்றனஅந்தவகையில்  தமிழ் மணி  பத்திரிக்கை ஆசிரியர்   .பி . இராமன் அவர்களும் அவரது தமிழ்நட்பு வட்டங்களும் இணைந்தே  முகநூல் ஊடாக பெரும் தமிழ்ப் புரட்சியினை  ற்படுத்தி வருகின்றனர்
 ‘’ தகவல் ஊடகங்கள் இன்று பல்வேறு ுகங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது 
தமிழில் பத்திரிகைகள் தோன்றியது ஒரு தற்செயல் காது கேளா மனைவிக்கு கருவி செய்யப் புறப்பட்ட ிரகம் பெல் தொலை பேசியைக் கண்டு பிடித்ததுபோல , சமய பிரச்சாரத்திற்காக தோன்றிய பத்திரிகைகள்  சங்க இலக்கியம் பேசி ,  பின்  வேற்று அரட்டையில்  வீணாய்க் காலம் போக்கி ,திடீரென  விழித்தெழுந்து விடுதலைக்கு பிரசாரம் செய்து , இடையிடையே இலக்கியம் பகிர்ந்து , இன்றைக்கு துறைக்கு ஒன்றாய் கிளை பரப்பி நிற்கின்றன .

தமிழ் ஊடகங்கள் மொழிக்கு அளித்த  கொடைகள் 3 வகை .
1.மொழிக்கு செய்த பங்களிப்பு 
2,தமிழரின் அறிவை விரிவாக்க அவை மேற்கொண்ட  / மேற்கொள்ளும்  முயற்சி 
3வாசிப்புப் பழக்கத்துக்கு தந்த ஊக்கம் .

வதந்தி ஆனாலும் பரவாயில்லை அதை விரைந்து தா  என்ற மக்களின் செய்தி தாகத்தை தணிப்பது  சமூக ஊடகங்கள் என அழைக்கப் படும்  தனி நபர்ஊடகங்களான  முகநூலும் , டுவிட்டரும் ஆகும் . 

வானொலி அறிமுகமான போது  அது நாளிதழ்களை அளித்து விடும் எனக் ருதப்பட்டது . தொலைக் காட்சி வந்த போது  வானொலி தேவையற்றதாகி ிடும்எனக் கருதப்பட்டது . இணைய தளங்கள் தொலைக்  காட்சிகளை  விட விரைவாக செய்தி அளித்தால்  தொலைக் காட்சிகளில் யுகம் முடிந்து விடும்  எனச்சொன்னார்கள் , லைப் பூக்கள் , பேஸ்புக் , டுவிட்டர் , போன்ற சமூக ஊடகங்களில்  உடனடிக் கருத்துப் பரிமாற்றம் சாத்தியம் என்பதால்  இணையச் செய்தித்தளங்களுக்கு இனி அவசியம் இருக்காது எனப் பேசினார்கள் . னால் இன்று எல்லாம் ஒன்றுடன் ஒன்று பிரிக்க இயலாத நிலையில் இயங்கும் ஒரு செய்திஉலகம் உருவாகி  யுள்ளது அது வசதிக்கேற்ப தேர்ந்து கொள்ள பொது மக்களுக்கு  அநேக வாய்ப்பளிக்கிறது . எனக் குறிப்பிடும்பத்திரிகையாளர்பத்திரிகையாளர்மாலன்
மேலும் '' இன்று ஊடகங்கள் பயனர்களை  எதிர் கொள்கின்றன .தங்களுடைய மின் உரையாடல்களில் குறுந்தகவல்கள்  , முகநூல் , நிலைத் கவல்கள் ,வலைப் பதிவுகள் , , இணையப் பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள தகவல்களை ஊடகங்களில் எதிர் பார்க்கின்றார்கள் . இன்று பல இணையத் தளங்களுக்குசமூக ஊடகங்களுக்கும் விஷிய தானம் செய்பவர்களாக அச்சிதழ்கள் தான் இருக்கின்றன  என்பதும் , அதே நேரம் பல பத்திரிகைகள் மின்னணுஊடகங்களாள்  மூடப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதும் இன்று ஊடக உலகில் நிலவும் ஓர் விசித்திரம் .'என்றும் குறிப்பிடுகின்றார்    [ மாலன் இணையம் ]

முகநூலில்  தமிழ் இலகுவாகப் புரியும்தமிழில் அர்த்தம் உண்டு . பதிவு , தரவிறக்கம்  என்பவற்றால் தமிழ் சமூகத்தினால் தமிழில் உரையாட முடிகின்றது

குத்து விளக்கு  என்றால் ....ஆங்கிலத்தில் லாம்ப்  என்று தான் இருக்கும் , அது மின்சார விளக்கையும் குறிப்பிடும் . ஆனால் தமிழில் ஒவ்வொன்றுக்கும்ஒவ்வொரு ெயர் உண்டு
தமிழ் விரிவான மொழி ஆனால் இலகுவில் பேசக் கூடிய இனிமையான மொழி . தமிழ் மொழியை வளர்க்க இணையங்கள் மிக உன்னதமாக உள்ளது.குறிப்பாக முகநூலையும் குறிப்பிடலாம். 

அம்மா  [amma ] என்று டைப்  பண்ணினால்  அம்மா  வரும்வரி வடிவம் வேறாக  வந்தாலும் உச்சரிப்பு முக்கியம்.  சுவிஸில் நிறைய பேர் தமிழ் வாசிக்க , படிக்கதொடக்கி விட்டனர்

தமிழ் நிகழ்வுகள்விளம்பரங்கள்பத்திரிகைகள் தமிழில் வருகின்றதுடொச் காரருக்கு நிகழ்வுகளை  தமிழ் அழைப்பிதழுடன் இணைத்து டொச்   அழைப்பிதல்கொடுக்கப்படுகிறது.தமிழ்  மக்கள் வாழும் இடமெங்கும் விளம்பரம் உட்பட அனைத்தும் தமிழில் தான் உலா வருகிறது

வெள்ளைக் காரன் கூட '' வணக்கம் '' என்று தமிழில் சொல்வதும் உண்டு . அடுத்த சந்ததி தமிழ் இல்லாமல் போகப் போகிறது என்று புலம்புகின்றனர் . அதுசுவிஸ் இல் இளையோரிடம் கையளிக்கப் பட்டுள்ளது.இப்பவே தமிழ் நிகழ்வுகள் தொடக்கம் , பாடசாலை , விழாக்கள் என்று யாவும் இளையோர் குழுசெயற்படுத்தி  வருகிறது .

உதாரணமாக  , தமிழக சினிமாவில் யிர்ப்புடன் , இலக்கண இலக்கியங்களுடன் , வரன்முறையான  தமிழ் மொழி  பயன்படுத்தப் படுமாயின்  அதுவே பெரும்விடயம் . ஏனெனில் தமிழ் சினிமாடிவி நாடகங்களின் தாக்கம் தமிழ் நாட்டை விட புலம் ெயர் தமிழர்களின் கனவுத் தொழித் சாலையாகயாகவும் உள்ளது.  என்கின்றார்  சுவிஸ் ஊடகவியலாளர் சுயர்சன் . 

புதுச்சேரி இணையத்தில் [ இன்பத் தமிழ்தமிழ் இணைய  திங்களிதழ் ] 

பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'என்கின்றார் ஆசிரியர் வா.ஆ.கிரிதரன் ]

6. நிறைவாக

..குறிப்பாக தமிழ் நாட்டிலும்இலங்கை , மற்றும் தமிழர்கள்  வாழும் புலம் பெயர் தேசம் எங்கும்  தமிழில் முகநூலைப் பயன்படுத்தும்  வரப்பிரசாதம் கிடைத்துள்ளது . பொதுவாக bloge , மற்றும் வலைத் தளங்களை பயன் டுத்தும்  போது அதன்  பெயர் தெரியாமல் சாதாரணமானவர்கள் வலைத் தளப் பதிவுகை பார்வை இட முடியாது . ஆனால் முகநூல் பயனரின்  பெயரை பதிவு செய்ததும் பல தகவலில்  பயணிக்க செய்கின்றது . 

இணைய தொழில் நுட்பத்தினால் அச்சு ஊடகங்களில் தமிழ்  மொழிப் பயன்பாடு குறைவடையப் போகின்றது  ன்று மிரட்சி கொண்டவர்களையும் , தன்னுள் இணைத்து அச்சு இதழ்களுக்கும் களம் கொடுத்துள்ளது.
அத்துடன் தமிழை வளர்ப்பதுக்கான ஊடகமாக உள்ளதுநிறைய தமிழ்க் ுழுக்கள்நிறைய புத்தகங்கள்  ின்னணு வாக வருகிறது ,  உதாரணமாக சித்தர் அறிவியல்  குழுஅடவி இதழ்,  கலகம்,  மகுடம்ஞனம் , பூவரசி, .காற்றுவெளி , வளரி , . திண்ணை,புதுச்சேரி  போன்ற ......இணைய  தளங்கள்நிறைய வீடியோஇசை ட்டுக்கள்  குறும்படங்கள்  தொலைக்காட்சி படம்டிவி நாடகம்  என்று யாவும் பதிவு செய்யும் வகையில் ,  விடயங்களை தமிழில் அறியும் வகையில்  வரலாற்று ஆவணங்களாகவும்  பதிவு செய்யப் படுகின்றன . அந்தவகையில்  உலக வலையமைப்பில்  முகநூல்ஊடான  தொடர்பாடலில்  தமிழ்  மொழிப் பிரயோகம்  மிக புரட்சி மிக்க நிலையில் உள்ளமை தமிழ் மூகத்துக்கான வரப்பிரசாதம் ஆகும் . இங்கு தொடர்பாடல் ஊடகமாக முகநூலும்  தமிழும் இயங்குவதே முக்கிய காரணி ஆகும் .


உசாத்துணை ..

விக்கிப் பீடியா 
புதுச்சேரி இணையம் , 
மாலன் இணையம் 
திசை காட்டி  இணையம் 
பத்திரி செச்திரி இணையம் 
தினமணி  விவாத மேடை [ இணையம் ] 
நக்கீரன் இணையம் 


நேர்காணல் 
கலைச்செல்வன் 
சுயர்சன் 
மதுசன் 
தினேஷ் .

 தர்மினி பத்மநாதன் . ma / mphil 


பயன்பாட்டுத் துறையில்  துறை தோறும்  தமிழ்
பன்னாட்டுக் கருத்தரங்கம்  2014
எத்திராஜ் மகளீர் கல்லூரி , சென்னை
யில்  நிகழ்ந்த போது  வாசிக்கப் பட்ட கட்டுரை

No comments:

Post a Comment